tamilnadu

img

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை,பிப்.13- மானியமில்லாத சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: மத்தியில் ஆட்சிப் பொறுப்பிற்கு பாஜக வந்த நாள் முதலாக, விலைவாசி உயர்வு  என்பது அன்றாட செய்தியாகி வருகிறது. இந்நிலையில் மானியமில்லாத சமையல் எரிவாயு உருளை விலை (14.2 கிலோ)  பிப்ரவரி 12  முதல் ரூ. 147 உயர்த்தப் பட்டுள்ளது. சென்னையில் எரிவாயு உருளை ரூ. 734-இல் இருந்து ரூ. 147 உயர்த்தி தற்போதைய விலை ரூ. 881-க்கு  விற்பனையாகிறது.

கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் தொடர்ந்து 6-வது முறையாக எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. புத்தாண்டு பரிசாக 2020 ஜனவரியில் (1 ஆம் தேதி) எரிவாயு உருளை ரூ.19 உயர்த்தப்பட்டது. சமீபத்திய மத்திய அரசின் பட்ஜெட்டில், சாதாரண மக்களின் வாழ்வாதாரம் சார்ந்து எவ்வித திட்டமோ, சலுகைகளோ அறிவிக்காமல் வார்த்தை ஜாலங்களுடன் நீண்ட உரை நிகழ்த்தி- நெடிய துயரத்தை நாட்டு மக்கள் எதிர்  கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். இந்த மாதத்திற்குண்டான வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை நிர்ணயம் குறித்து இதுவரை எந்த விதமான அறிவிப்பும் வெளியிடாத நிலையில் திடீரென்று ரூ. 147 விலை உயர்வு என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியும், கோப அதிர்வுகளையும் உருவாக்கியுள்ளது. மத்திய அரசின் தவறான பொருளா தாரக் கொள்கையின் விளைவாகவும், பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறு வனங்களுக்கும் சலுகைகளை  அள்ளித்தரு வதின்  காரணமாக, சாதாரண மக்களின் மீது வரிச்சுமைகளை ஏற்றி வாட்டி வதைப் பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மை யாகக் கண்டிக்கிறது. எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.